Tuesday, July 23, 2013

இறைவன்

தூணற்ற பெருங்ககனம், நிகரற்ற இறை வசனம் அழகுற்ற மானுடர் வதனம். ஆண்டவன். அருளெனத்தகும் மலர்தர்தனில் அமிர்தம். மழைதனில் துமிதம், மாலைதனில் தென்றலின் இதம் அல்லாஹ்வின் அற்புதம் விசும்பிடை வளர் மதி. பசுந்தரை இடை குளிர் நதி, அண்டத்தில் புவியின் கதி, எல்லாம் இறைவன்விதி கருவறையின் குழந்தை பிறப்பு, மண்ணறையில் மனிதன் மரிப்பு. கண்ணில் கட்புலனாகும் உணர்௨ இது கிரகம் ஆளும் கட௨ள் சிறப்பு,
(ககனம்-வானம்)

No comments:

Post a Comment